காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க தீவிரம் காட்டிய ஒய்.எஸ் ஷர்மிளா தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் பக்கம் காற்று வீசுவதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி,  ஒய்.எஸ் ஷர்மிளாவை இணைக்கும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.