பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க தலைவராகவுள்ள அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது தனது சக்தி யாத்திரையும் தொடரும் என்று காயத்ரி ரகுராம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது “சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான எனது பயணத்தை ஜனவரி 27க்கு பதிலாக ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்குகிறேன். அண்ணாமலையும் இதே நாளில் யாத்திரை செல்ல உள்ளார். அதற்கு எதிராக தனது யாத்திரையை தொடங்குகிறேன். உண்மமையும், நீதியும் வெல்லும்” என காயத்ரி ரகுராம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.