கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி,  கூட்டத்தில் தமிழகத்தில் தண்ணீர் தர கூடாது என முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்து சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி,  குமாரசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் எடுக்கக்கூடிய ஒரே முடிவு தண்ணீர் தர இயலாது என்பதுதான்.

இதுவே கடந்த 20, 30 ஆண்டுகளாக மாறாத கட்சியாக இருந்து வருகிறது. தற்பொழுதும் அதே காட்சி தான் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கு மேலாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டிற்கு நாங்கள் தண்ணீர் திறந்து விட முடியாது, இயலாத சூழலில் இருக்கிறோம். உச்சநீதிமன்றம் சொன்னாலும் கூட,  அதனை திறந்து விடக்கூடிய சூழலில் நாங்கள் இல்லை என்பதை அனைத்து கட்சி கூட்டத்தில் அவர்கள் முடிவாக எடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கடந்த 123 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வறட்சி  என்பது நிலவுகின்றது.

இன்னும் சொல்லப்போனால் கர்நாடகாவின் குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்ய கூட முடியாதாக இருக்கின்றது. எங்களுக்கு 70 TMC  தண்ணீர் தேவைப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என்பதை அவர்கள் முடிவாக எடுத்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் கையிருப்பில் 53 TMC  தண்ணீர் மட்டுமே இருக்கின்றது. எனவே தண்ணீர் திறந்து விட முடியாது என தெரிவித்துள்ளனர்.