தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும். மேலும் பிற்பகலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கும் என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலாரத்தை கொடுக்கப்பட்டதால் நாளை திங்கட்கிழமை திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மழையை பொறுத்து விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.