தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும். மேலும் பிற்பகலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கும் என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.