பாட்னாவில், மனேர் காவல் நிலையத்திற்கு அருகே, பகல் வெளிச்சத்தில் ஒரு மாணவர் துப்பாக்கியால் சுடப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் 3 அன்று நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞர், மாணவர் ராகுல் குமாருடன் வாக்குவாதம் செய்து, அவரது நெஞ்சில் துப்பாக்கியால் சுடுவது தெளிவாகத் தெரிகிறது. பீகார் மாநிலத்தில், சட்டம்-ஒழுங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள இந்த சம்பவம், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
पटना के मनेर का नजारा देखिए– एक युवक कैसे दूसरे को सीधा गोली मार रहा है.. pic.twitter.com/0aitTxFzow
— Ajeet Kumar (@iajeetkumar) September 4, 2025
ராகுல் குமார், ஹுலாசி டோலாவின் ராமாபூர் டோஃபிரைச் சேர்ந்தவர், இந்தத் தாக்குதலில் நெஞ்சில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்து, தற்போது பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (PMCH) சிகிச்சை பெற்று வருகிறார். சுடப்பட்ட பிறகு, ராகுல் காவல் நிலையத்திற்கு ஓடி சென்றதாகவும், உடனடியாக காவல் அதிகாரி பிரதீப் குமார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH पटना, बिहार: मनेर थाना क्षेत्र के अंतर्गत एक कोचिंग सेंटर के बाहर आज एक व्यक्ति को गोली मार दी गई।
पटना के SP सिटी भानु प्रताप सिंह ने कहा, “राहुल नाम के एक व्यक्ति को उसके कोचिंग संस्थान के पास गोली लगी है। गोली चलाने वाले की पहचान हो गई है। प्रथम दृष्टया ऐसा लगता है कि… pic.twitter.com/yBFCH38Bfl
— ANI_HindiNews (@AHindinews) September 4, 2025
சிசிடிவி காட்சிகள் மூலம் தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டு, அவரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆரம்ப விசாரணையில், இந்த தாக்குதல் தனிப்பட்ட பகை காரணமாக நடந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட குண்டு ஓடு மீட்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக Forensic Science Laboratory-க்கு அனுப்பப்பட்டுள்ளது.
