பீகாரின் பாட்னாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. செப்டம்பர் 2, செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணியளவில், ரயில் நிலையத்தில் காத்திருந்த 22 வயது பெண் ஒருவர், வலுக்கட்டாயமாக மிரட்டலுடன் கடத்தப்பட்டு, இரு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆண்கள், அந்தப் பெண்ணை அணுகி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவரை வலுக்கட்டாயமாக ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், சம்பவத்திற்குப் பிறகு அருகில் இருந்த காவல் ரோந்து குழுவை எச்சரித்ததை அடுத்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறை, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, விசாரணைக் குழுவை அமைத்தது.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் மனித உளவுத் தகவல்களைப் பயன்படுத்தி குற்றம் நடந்த இடத்தைக் கண்டறிந்தனர். குற்றவாளிகளான சோனு குமார் யாதவ் (எ) சோனு சனாதா மற்றும் நிரஞ்சன் ஆகியோர், உள்ளூர் வாசிகள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் தப்பிக்க முயன்றபோது சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டனர், ஆனால் துப்பாக்கியை அருகிலுள்ள கால்வாயில் வீசியதால் அதை கைப்பற்ற முடியவில்லை.