போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். அரசின் நிதி நிலைமை சரியாக இல்லை என்பதால் அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்ப செய்தியை தரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அகவிலைப்படி உயர்த்தப்படாததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளும், நெருக்கடிகளும் காலவரையின்றி தொடர்வதை போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.