“The Elephant Whisperers” ஆவண படத்தில் நடித்த பெள்ளிக்கு இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏனெனில் நேற்று நடந்த ஆஸ்கர் விழாவில் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் யானை பராமரிப்பாளராக நடித்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெள்ளிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது பெள்ளியை பாராட்டும் விதமாக இபிஎஸ் அவருக்கு தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அதேபோல் சிறந்த பாடல்களுக்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.