ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை தேடியும் உள்நாட்டு போரில் இருந்து தப்பிப்பதற்கும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் மக்கள் அடிக்கடி விபத்தையும் சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது படகு திடீரென மூழ்கியுள்ளது. இது குறித்து அறிந்த இத்தாலி நாட்டின் கடலோர காவல்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் மீட்புக் குழுவினர் 59 பேரை பிணமாக மீட்டுள்ளனர். மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.