அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதிமுக தான். 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுக தான். அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும்,  எந்த நபராலும் முடியாது. கட்சி தொடங்கி 6 மாதத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுக தான்.

“கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் இல்லாமல் செய்தது அதிமுக தலைமையிலான அரசு; மக்கள், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கியது அதிமுக; மதுரை மண் ராசியான மண்; மதுரையில் எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும். மக்களுக்கான பல திட்டங்களை கொண்டுவந்தது அதிமுக. தொண்டன் உழைப்பால் உருவானது அதிமுக  என தெரிவித்தார்.