எம்ஜிஆர் மறைந்த பின்னர் அதிமுக மறைந்துவிடும் என கருணாநிதியை நினைத்தார். ஜெயலலிதா கட்சியை வலுப்படுத்தி மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுத்தார். உலகையே அச்சுறுத்திய கொரோனாவை மிகச் சிறப்பாக கையாண்டது அதிமுக அரசு. கொரோனா  காலத்தில் 13 மாதங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்கியது அதிமுக அரசு.

கஜா புயலின் போது புயலை விட வேகமாக செயல்பட்டு பாதிப்புகளை சீரமைத்தோம். மதுரை மண் ராசியான மண், மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில், 25 ஆண்டுகள் முன்னோக்கி சென்றோம்; ஆனால் திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில், 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டோம் என  அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.