செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக இப்பொழுது உங்களுக்கு தெரியும். புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கம். அம்மா அவர்கள் கட்டி காத்த இயக்கம். இரட்டை இலை இருந்தும் எப்படி எல்லாம் இன்றைக்கு பழனிச்சாமி தலைமையில் பலவீனப்பட்டு கொண்டிருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

அவர்களால் தங்கள் பலவீனத்தை மறைப்பதற்காக பிற கட்சிகளில் இருந்து குறிப்பாக… அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நிர்வாகிகளை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குகின்ற நிலைமையில் இருக்கிறார்கள். யாரோ ஒரு சிலரை விலைக்கு வாங்குவதால்   அவர்கள் சார்ந்த சமுதாயத்தையே விலைக்கு வாங்கியதாக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

அந்த இயக்கம் ஒரு வட்டார கட்சியாக இன்றைக்கு பலவீனம் பட்டு வருகின்றது. அதனால் நண்பர் ஓபிஎஸ் அவர்கள் கூட்டணி இல்லாமல் அதிமுகவால் ஒன்று செய்ய முடியாது என்ற கருத்தை அவர் சொல்லி இருக்கிறதாக தான் நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.