தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கின. இது தொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தொடர் மழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும். தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.