தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் துணிவு படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏகே62 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டு மகிழ்திருமேனி இயக்குனராக கமிட் செய்யப்பட்டுள்ளார். தற்போது படத்திற்கான டைட்டில் மற்றும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதால் ஏகே 62 குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் உலக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால் மார்ச் மாதத்தின் இறுதியில் ஏகே 62 படப்பிடிப்பை தொடங்கி 4 மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என மகிழ் திருமேனியிடம் கூறி இருந்ததாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் படத்தை அவசரமாக எடுத்தால் தரமானதாக இருக்காது என்பதால் படத்தை நிதானமாக எடுங்கள் என்று தற்போது அஜித் கூறிவிட்டாராம். அதன் பிறகு தன்னுடைய உலக சுற்றுப்பயணத்தை வைத்துக் கொள்வதாகவும் அஜித் கூறியுள்ளாராம். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருவதால் அந்த படத்திற்கு ஈடாக ஏகே 62 திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என அஜித் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.