தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் 8 நாட்களில் வாத்தி திரைப்படம் 75 கோடி வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் புதிய வசூல் நிலவரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் 15 நாட்களில் 100 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த தகவலை படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிய வாத்தி திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று கொடுத்துள்ளதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியான நிலையில் ஆந்திராவில் உள்ள கம்பம் என்ற பகுதியில் வாத்தி திரைப்படத்தை இலவசமாக திரையிட வேண்டும் என மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி வாத்தி திரைப்படத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டியது தான். எனவே இந்த திரைப்படம் மாணவர்களுக்கு இலவசம். மேலும் படத்தை இலவசமாக திரையிட அனுமதி வழங்குமாறு தயாரிப்பு நிறுவனத்தை அணுகுங்கள் என்று கூறியுள்ளார்.