தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் அகிலன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அகிலன் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ நேற்று வெளியானது.

இந்நிலையில் அகிலன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது நடிகர் ஜெயம் ரவி பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, என்னுடைய 20 வருட சினிமா பயணத்தில் எனக்கு நிறைய ஒத்துழைப்பு மற்றும் பாராட்டுகள் கிடைத்துள்ளது. எப்போதும் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அகிலன் திரைப்படம் மேக்கிங்கை பொறுத்தவரை ரொம்ப கஷ்டமான ஒரு படம்.

இதெல்லாம் நடக்குமா சாத்தியமாகுமா என்று நினைத்தபோது தயாரிப்பாளரால் அனைத்தும் சாத்தியமானது. இந்த படத்தை உருவாக்கிய என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பிரியா தமிழ் பேசி நடிக்கும் ஹீரோயின். அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னை மெருகேற்றிக் கொள்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதன் பிறகு படத்தில் தான்யா ஒரு சர்ப்ரைஸ் கதாபாத்திரமாக அமைந்துள்ளார். மேலும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் என்று கூறினார்.