இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் துனிஷா ஷர்மா (20). இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24-ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் உள்ள மேக்கப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை துனிஷா ஷர்மா அலிபாபா-தாஸ்தென்-இ-காபுல் என்ற வெப் தொடரில் நடித்து வந்த நிலையில் அந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வெப் தொடரில் ஹீரோவாக நடித்து வரும் ஷீசன் கானை நடிகை துனிஷா காதலித்து வந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக நடிகர் ஷீசன் கானை காவல்துறையினர் கைது செய்ததோடு துனிஷா சர்மா தற்கொலை விவகாரம் தொடர்பாக 500 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்த ஷீசன் கான் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். ஒரு லட்ச ரூபாய் பிணையில் ஷீசன் கான் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவருடைய பாஸ்போர்ட்டை கோர்ட் வாங்கி வைத்ததோடு அனுமதி இன்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று ஷீசன் கான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.