செய்தியாளரிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் ரத்து செய்யும் என தெரியும். இது  தெரிந்த ஒன்றுதான.  நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக தேவர் குருபூஜைக்கு செல்லாத எடப்பாடி பழனிச்சாமி இப்போது சென்றது பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். இப்போ தேர்தல் வருது அதனால போறாரு.

உங்களுக்கே தெரியும் சங்கரன்கோவில் வெற்று சேர் பார்த்திருப்பீங்க. தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டி வந்த கூட்டம் எல்லாம்  இரண்டு மணி நேரம்,  3 மணி நேரத்துல வீட்டுக்கு  போயிட்டாங்க. வெறும் காலி சேர் கிட்ட சவால் விட்டு பேசிட்டு இருந்தார். இதுதான் ADMK நிலைமை.

வருகின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பழனிச்சாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்க போகிறார். மகாபாரதத்தில் எப்படி துரியோதன அகம்பாவத்தில் பேசிட்டு திரிவாரு.  கடைசியில் வீழ்ச்சியை சந்தித்தது போல,  துரியோதனன் போன்ற துரோக சிந்தனை உடைய பழனிசாமி, வீழ்ச்சி அடையப்போவது உறுதி. அதுதான் நான் இந்த நேரத்துல இங்கே உங்களுக்கு சொல்கிறேன் என தெரிவித்தார்.