கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குத்தாரப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேரில் வந்து திறந்து வைத்தார். இதேபோன்று தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை போன்ற 9 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக கட்சியின் அலுவலகங்களையும் ஜே.பி நட்டா காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, தமிழகத்தில் எப்போதும் இல்லாத ஒரு சரித்திரம் நம் கண் முன்னே நடக்கிறது. ஒரே நேரத்தில் 10 இடங்களில் நம்முடைய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. திமுக அரசை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். வருகின்ற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி கரத்தை கரத்தை வலுப்படுத்த வேண்டும். நாம் முன்பை விட இன்னமும் வேகமாக பணியாற்ற வேண்டும் என அண்ணாமலை கூறினார்.