வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முன்பாக காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் பி.செந்தில் முருகன், தி.மு.க வேட்பாளர் ஏ.எம் சிவப்பிரசாத் அக்கட்சியின் மாற்று வேட்பாளராக விசாலாட்சி போன்றோர் தங்களது வேப்பமனுவை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே அ.தி.மு.க இ.பி.எஸ் அணியின் வேட்பாளரான கே.எஸ் தென்னரசு வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்த கட்சி சார்பில் கூறப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!
Related Posts
5 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிய கணினி ஆப்ரேட்டர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!
ஜாம் நகரில் உள்ள மோர்க்கண்டா கிராமத்தில் நவீன் சந்திர நகும் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்தில் கணினி தொழில் முனைவோராக பணியாற்றி வருகிறார். இவர் 2 மணி நேரம் மட்டுமே…
Read moreவாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read more