வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முன்பாக காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் பி.செந்தில் முருகன், தி.மு.க வேட்பாளர் ஏ.எம் சிவப்பிரசாத் அக்கட்சியின் மாற்று வேட்பாளராக விசாலாட்சி போன்றோர் தங்களது வேப்பமனுவை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே அ.தி.மு.க இ.பி.எஸ் அணியின் வேட்பாளரான கே.எஸ் தென்னரசு வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்த கட்சி சார்பில் கூறப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more