விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி நடுத்தெருவில் குட்டி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி, வெள்ளாடு என 150 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் குட்டிராஜ் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்றுள்ளார். அப்போது ஏழாயிரம் பண்ணை அருகே மூடப்பட்ட அரசு மதுபான கடை அருகே கம்பிவேலியில் உரசியதால் 4 ஆடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்டு குட்டிராஜ் பிற ஆடுகளை விரைவாக ஓட்டி சென்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற நபர்…. மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…
Read more“கூகுள் மேப்பில் ரூட்”… பெண்ணின் கவனக்குறைவால் கால்கள் நசுங்கி 7 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை..!!
சென்னை அசோக் நகரில் மாரியப்பன்-சரிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அனைவரும் தூங்குவதற்கு இடம் இல்லாததால் சிலர் வெளியே படுத்து தூங்கியுள்ளனர். அப்போது…
Read more