விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ்லைன் திருப்பதி நகரில் சாலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பாண்டிதேவி(37) சித்துராஜபுரத்தில் இருக்கும் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மகாராஜன் என்ற மகனும், புவனேஸ்வரி(17) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் புவனேஸ்வரி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலைமுத்து இறந்துவிட்டார். மேலும் கடந்த வருடம் மகாராஜாவும் இறந்துவிட்டார். இந்நிலையில் கணவரும், மகனும் இறந்ததை நினைத்து பாண்டிதேவி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக புவனேஸ்வரியும் பள்ளிக்கு சொல்லவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பாண்டி தேவியும், அவரது மகள் புவனேஸ்வரியும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், மகளின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இன்று பிப்ரவரி மாதம் 4- ஆம் தேதி மகாராஜாவிற்கு நினைவு நாள் ஆகும். இதனால் மன உளைச்சலில் தாயும், மகளும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர்.