ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டி யானை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் சின்னதம்பி, ராஜாவர்தன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் கருப்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தது.

தற்போது மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மரியபுரம், ஜோரகாடு கரளவாடு, பசப்பன் தொட்டி ஆகிய பகுகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனத்துறையினரின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வனத்துறையினர் கபில்தேவ், அரிசி ராஜா ஆகிய கும்கி யானைகளை வரவழைத்து கருப்பன் யானை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.