ஓடும் ரயிலுக்கு அடியில் உயிரைப் பணயம் வைத்து நபர் ஒருவர் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அவரது உயிர் பிரிந்திருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்புமின்றி ரயிலின் அடிப்பகுதியில் உள்ள கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அவர் செல்வது காண்போரை உறைய வைக்கிறது.

“>

 

எதற்காக அவர் இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை என்றாலும், பொறுப்பற்ற முறையில் எடுக்கப்பட்ட இந்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.