கேரளாவின் கண்ணூர் மாவட்டம் அழிக்கோடு பகுதியில், சாலை கோபத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் 77 வயது முதியவருக்கு கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுள்ளது. ஆழிக்கல் முந்தச்சாலி பகுதியை சேர்ந்தவரான  பாலகிருஷ்ணன் என்ற முதியவர், ஞாயிறு மாலை 4 மணியளவில் சிவாஜி சாலையில் உள்ள தனது வீட்டின் முன் காரில் அமர்ந்திருந்தபோது, இரண்டு இளைஞர்கள் நெருங்கி வந்து அவரது தலையின் பின்புறம் அடித்தனர்.

இது காருக்கு இடம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறு எனத் தெரிகிறது. “மற்றொரு காரு செல்ல போதுமான இடம் இருந்தது. அவர்கள் ஏன் என்னைத் தாக்கினார்கள் என இன்னும் புரியவில்லை” என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 20-25 வயது சேர்ந்த இளைஞர்கள் அவரை ஓட்டி, தள்ளி, தாக்கியதும், திட்டி பேசியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ஒரு இளைஞன் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் அவர் கூறுகிறார்.

தாக்குதலுக்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு, ஆழிக்கல் படகு பாலம் அருகிலுள்ள ஒரு கடையில் மீண்டும் அவர்களைச் சந்தித்த இளைஞர்கள், பாலகிருஷ்ணனைத் தாக்கி, அவரது வீட்டின் முன் வெட்டி கொன்றுவிடுவோம் எனவும் பயமுறுத்தியதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முதியவர், தன்னை அந்த இளைஞர்கள் அறியவில்லை என்றும், அவர்களின் செயல் புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வலப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், சாலை கோபம் காரணமாக ஏற்படும் வன்முறையின் அச்சுறுத்தலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.