உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில், சீட்டாட்டம் விளையாட அறை கேட்டு கேட்டதை மறுத்த உணவக மேலாளர் மீது இளைஞர்கள் குழு ஒன்று கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, நைனிடாலின் கவுலாபர் பகுதியில் ஹல்த்வானி–கத்கோடம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராயல் ஸ்பைஸ் உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது பற்றி வெளியான தகவலின்படி, சில இளைஞர்கள் உணவகத்தில் சீட்டாட்டம் விளையாட தனி அறை கோரியுள்ளனர். அதனை உணவக மேலாளர் நிராகரித்ததால், கோபமடைந்த இளைஞர்கள் குழுவாக மேலாளரை தாக்கி, உணவகத்தின் பொருட்களை சேதப்படுத்தினர். இந்த தாக்குதல், உணவக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. வீடியோவில், இளைஞர்கள் மேலாளரை கைத்தடி, பெல்ட் உள்ளிட்ட பொருட்களால் அடித்துக் கொடுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
नैनीताल जिले की क़ानून व्यवस्था देखिए? कैसे गुड़े रेस्टोरेंट में घुसकर मैनेजर को तालिबानी स्टाइल में लहूलुहान कर देते हैं
घटना मंगलवार रात की है गौलापार में हल्द्वानी काठगोदाम हाईवे पर रॉयल स्पाइस रेस्टोरेंट होटल में कुछ लोगों ने ताश खेलने के लिए कमरे की डिमांड की.👇 #Nainital pic.twitter.com/xQYTNQ4mwE
— Yogesh Bhatt (योगेश भट्ट) (@YogeshBhatt4UK) October 8, 2025
இந்த சம்பவம் குறித்து, யோகேஷ் பட் என்ற சமூக ஊடக பயனர் X தளத்தில் வீடியோவை பகிர்ந்து, “நைனிடாலில் சட்டம் ஒழுங்கு நிலைமை எங்கே சென்றது? குண்டர்கள் ஒரு உணவகத்திற்குள் நுழைந்து மேலாளரை தலிபான் பாணியில் தாக்கியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
