ஜார்கண்ட் மாநிலம் நோவமுண்டி அருகேயுள்ள பராஜம்டா கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதிக்கு சொந்தமான வீர் நாயக் என்ற நபர், திங்கள்கிழமை இரவு தன்னுடைய நண்பர்களுடன் அதிக அளவில் மதுவை அருந்தியுள்ளார். பின்னர், மது போதையில், பராஜம்டா வாரச் சந்தை வளாகத்தில் உள்ள காளி கோயிலுக்குள் திருடும் நோக்கத்துடன் நுழைந்தார்.
கோயிலின் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த வீர் நாயக், அங்கு வைக்கப்பட்டிருந்த காளி அம்மன் சிலையின் நகைகள், பூஜைப் பொருட்கள், மணி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல திட்டமிட்டார். ஆனால் குடிபோதையில் இருந்ததால், அவருக்கு தூக்கம் வந்துவிட்டது. உடனடியாக அங்கேயே படுத்து ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள், ஒருவரை உள்ளே தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
चोरी के बाद चोर को आई ऐसी नींद कि मंदिर में ही सो गया – सुबह आंख खुली तो सामने थे पुजारी और पुलिस!
चौंकाने वाली घटना पश्चिम सिंहभूम की, जहाँ मंदिर में घुसकर चोरी करने वाला युवक चोरी के बाद वहीं गहरी नींद में सो गया। यहाँ बाज़ार इलाके में एक काली मंदिर है. इस काली मंदिर में एक… pic.twitter.com/7D0SoU99za
— AajTak (@aajtak) July 16, 2025
பராஜம்டா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீர் நாயக்கை கைது செய்தனர். அவர் திருட முயன்ற பொருட்கள் கொண்ட பை உடன் கைதானார். விசாரணையில், அவர் தங்கிசாய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் காவல்துறையின் அதிகாரப் பரிவீச்சில் வைக்கப்பட்டுள்ளார். “திருட வந்தவரைத் தூங்க வைத்து, சுட்டிக் காட்டியது கோயிலின் சக்திதான்!” என போலீசார் வேடிக்கைசொல்லியதும் குறிப்பிடத்தக்கது.
