இன்றைய காலகட்டத்தில் இணையதளம்  மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி எஸ் பி சிலம்பரசன் சைபர் கிரைம் குறித்து பேசி உள்ளார்.

அவர் பேசியதாவது, whatsapp மூலமாக தெரியாத எண்களில் இருந்து நீங்கள் ஆன்லைன் லோன் எடுத்திருக்கிறீர்கள் அல்லது உங்களுடைய உறவினர்கள் லோன் எடுத்துள்ளார்கள் என்று அதற்கான பணத்தை கேட்டு மிரட்டுவார்கள். சிலர் ஆன்லைன் லோன் ஆப்களில் கடன் பெறும்போது, தங்களுடைய மொபைல் போனில் உள்ள அனைத்து தொடர்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அந்த லோன் ஆப் பெற்றுக் கொண்ட பிறகு தான் கடன் வழங்கப்படும்.

அவர்கள் ஆன்லைன் மூலமாக லோன் கட்டி வரும் நிலையில் முழு தொகையை செலுத்திய பிறகும், நீங்கள் இன்னும் பணம் செலுத்த வேண்டி உள்ளது என்று கூறி குறுஞ்செய்தியை அனுப்பி உங்களுடைய மொபைல் ஃபோனில் இருந்து எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து உங்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவார்கள்.

எனவே இது போன்ற சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு உங்கள் மொபைல் போனில் உள்ள whatsapp Privacy settings ஐ மாற்றிக்கொள்ள வேண்டும். அதோடு சமூக வலைதளங்கள் மூலமாக வரும் லோன் ஆப் களிலிருந்து லோன் எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், யாரும் ஏமாறக்கூடாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டால் சைபர் கிரைம் இணையதளமான www.cybercrime. gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற டோல் ஃப்ரீ எ ண் மூலமாகவும் உங்களுடைய புகாரினை தெரிவிக்கலாம் அறிவுரை வழங்கினார்.