
புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு கிரிவலப் பாதை மற்றும் ஆற்று படித்துறைகளை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் பணிகளை மேற்கொள்ளாததால் 4.80 கோடி பணத்தை வட்டியுடன் தருமாறு இந்திய தொல்லியல் துறைக்கு தஞ்சாவூர் மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது. பணியை தொடங்காத நிலையில் திட்டத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.