தமிழகத்தில் மொத்தமாக எட்டு அரசு போக்குவரத்து பணிமனை கோட்டங்கள் உள்ளது. அதில் திருநெல்வேலி தாமிரபரணி கிளை பணிமனை கோட்டமும் ஒன்று. இந்த பணிமனையில் இருந்து மொத்தமாக 56 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தாமிரபரணி கிளை பணிமனையில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் டீசல் திருடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது இந்த பணிமனையில் இருந்து தினமும் அரசு பேருந்துகளுக்கு டீசல் நிரப்பும்போது முறைகேடு நடந்தது தெரியவந்தது.

எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய பணிமனை கிளை மேலாளர் கிருஷ்ணன் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.