
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் இரும்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன்(26). இவருக்கு அனிதா(24) என்ற மனைவி இருந்துள்ளார். கோடீஸ்வரன் ஆவடி பட்டாலியன் படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கோடீஸ்வரனின் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அனிதாவிற்கு பிரசவ வலி காரணமாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அனிதாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. அதன் பின்னர் ஒரு மணி நேரத்தில் தாய் அனிதாவும் பரிதாபமாக இறந்துள்ளார். தாயும், குழந்தையும் சரி வர கவனிக்காமல் சிகிச்சை அளிக்கப்பட்டதே இறப்புக்கு காரணம் என கோடீஸ்வரன் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும், குழந்தையும் பிரசவத்தின் போது இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.