தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 2024-25 ம் ஆண்டு பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளுக்கு ‘மின்னஞ்சல் முகவரி’ தேவைப்படுகிறது. அதனால் அதனை தொடங்கும் பணி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 10 ஆம் தேதியில் இருந்து, அடுத்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதை அந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி கூறியதாவது, மாணவர்களை உயர்கல்வி செயற்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடிகின்றது. அப்படி விண்ணப்பிக்கும் போது, பல்வேறு கல்லூரிகளில், கல்லூரி சேர்க்கை தகவலை மின்னஞ்சல் மூலம் தான் அனுப்புகின்றனர். எனவே ஒவ்வொரு மாணவர்களுக்கும், மின்னஞ்சல் முகவரி இருப்பது கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார்.

*9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி தானாகவே மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும்.

*இவ்வாறு புதிதாக தொடங்கப்பட்ட புதிய மின்னஞ்சல் முகவரியை EMIS என்ற தளத்தில் பதிவிட வேண்டும்.

*மின்னஞ்சலை உருவாக்கிய பிறகு, அதை எவ்வாறு கையாள்வது என்பதை குறித்தும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

*அதோடு மின்னஞ்சலுக்கு உருவாக்கப்படும் ‘password’ மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், யாரிடமும் பகிரக் கூடாது என்றும், அப்படி பகிர்ந்தால் என்ன விளைவு என்பது குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும்.

*மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதோடு மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கிறது என்பதை குறித்தும் அவர்கள் கூற வேண்டும்.