
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான jio தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் மறுபக்கம் புதுப்புது திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ தற்போது ஆறுதல் அளித்துள்ளது.
அதாவது முந்தைய 999 ரூபாய் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த திட்டம் 1199 ரூபாயாக உயர்ந்த நிலையில் Hero 5G என்ற பெயரில் பழைய விலைக்கு மீண்டும் மாற்றியுள்ளது. வேலிடிட்டியும் 84 நாட்களில் இருந்து 98 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினசரி 3ஜிபி டேட்டாவில் இருந்து 2ஜிபி ஆக குறைக்கப்பட்டுள்ளது.