கரூர் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யம்பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு சென்ற மது வங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது திடீரென வந்த 4 வாலிபர்கள் குப்புசாமியிடம் உங்கள் மீது சந்தேகமாக இருக்கிறது. லைசன்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் ஆகியவற்றை காட்டுங்கள் என கூறியுள்ளனர். அதற்கு குப்புசாமி தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறியுள்ளார். இதனால் 4 பேரும் குப்புசாமியின் இரு சக்கர வாகனத்தை பறித்து கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து குப்புசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சுதாகர், ஜெகதீஷ், முருகன், சக்திவேல் ஆகிய நான்கு பேரும் இரு சக்கர வாகனத்தை பறித்தது தெரியவந்தது. இதில் சக்திவேல் கோவையில் இருக்கும் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏமாற்றி இரு சக்கர வாகனத்தை பறித்த வாலிபர்கள்…. காவலர் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more