இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளார. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதோடு மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் ஹிஜாப் அணிந்து வர மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தவறு செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்து மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“ஹிஜாப் சரியா அணியல” மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர்….. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்….!!
Related Posts
1 ஆண்டில் 300 மில்லியன் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
12 மாதங்களில் உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக பிரிட்டனில் உள்ள எடின்பர்க் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஓராண்டில் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலால்…
Read moreசாதிக்க வயது ஒரு தடையா?…. 98 வயதில் இளைஞர்களை வியக்க வைக்கும் மூதாட்டி… வைரல் வீடியோ….!!!!
வயது எவ்வளவாக இருந்தாலும் எதையாவது சாதிக்க முடியும் என்று நாம் நினைத்தால் அதனை நடத்திக் காட்டலாம். அதன்படி இணையத்தில் சமீபத்தில் வெளியான வீடியோவில் வயதான பெண் ஒருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை சிலிர்க்க வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த…
Read more