இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளார. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதோடு மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் ஹிஜாப் அணிந்து வர மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தவறு செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்து மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“ஹிஜாப் சரியா அணியல” மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர்….. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்….!!
Related Posts
10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?… நீங்களே பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் பத்து அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதாக உள்ளது. ஆனால் எத்தியோப்பியாவின் பழங்குடியின மக்கள் இதனை சாத்தியமாக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியாகிய வீடியோ, அந்த அசாதாரண பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இந்த மக்கள் இப்படி…
Read more“இனி கஞ்சா பயன்படுத்தினால் குற்றம் கிடையாது”…. அமெரிக்க அதிபர் அதிரடி முடிவு….!!!
அமெரிக்காவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக ஆபத்து கொண்டவைகளாக அங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது பெரிய…
Read more