இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளார. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதோடு மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் ஹிஜாப் அணிந்து வர மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தவறு செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்து மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“ஹிஜாப் சரியா அணியல” மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர்….. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்….!!
Related Posts
5000 மாலுமிகளுக்கு அதிரடி தடை..! இரவு நேரத்தில் இந்த பக்கமே நீங்க போகக்கூடாது… 9 மணி வரைக்கும் மட்டும் அங்க வேணா போங்க… பாலியல் தொழிலாளிகளை களை எடுக்கும் தாய்லாந்து… பின்னணி என்ன..?
அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர் விமானத் தாங்கி கப்பல் நீண்ட காலப் பயணத்திற்குப் பிறகு, தாய்லாந்தின் பட்டாயா துறைமுகத்திற்கு வந்துள்ள நிலையில், அங்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நடத்தை விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட…
Read more9 நாட்கள் இருட்டு குகையில் சிக்கிய நபர்…! “ஹரே கிருஷ்ணா நாமம் மட்டும்தான் ஒரே மூச்சு”… சாப்பாடு தண்ணீர் இல்லாமல் நேபால் வெள்ளத்தில் உயிர் பிழைத்த அதிசய நபர்… சிலிர்க்க வைக்கும் காணொளி…!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கோரமான பனிப்பாறை மற்றும் நிலச்சரிவுப் பெருவெள்ளத்தில் சிக்கி, கிட்டத்தட்ட 9 நாட்களுக்குப் பிறகு குகைச் சுவரிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் ஒருவர் கூறிய தகவல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளன. கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில்…
Read more