உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் நலனை பாதுகாக்க ஐநா சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் செயல்பட்டு வருகிறது. இதன் இந்திய தூதராக தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த பொறுப்பை மிகுந்த கவுரவம் மற்றும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

கடந்த 10 வருடங்களாக நான் மிகுந்த பொறுமையுடன் மன நிறைவாக வேலை பார்த்துள்ளேன். இதனால் இன்று ஐநா சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இதனால் என்னுடைய பொறுப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் அனைத்தும் கிடைக்க நான் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.