சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் ரேஷன் கடையின் விற்பனையாளராக வேலை பார்க்கும் ஜெயந்திமாலா என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜெயந்திமாலாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணை பதிவாளர் முத்து விஜயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்
கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“வருடத்தின் ஒரு நாள் மட்டுமே அற்புத தரிசனம்!”.. பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோவில் நடை திறப்பு..அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!!!
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான அழகர்கோவிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோயிலின் திருக்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வரும் ஆடிப் பெளர்ணமி திருநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு நிகழ்வு வெகு விமரிசையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வருடத்திற்கு…
Read more“மாணவனை ரத்தம் வர வர அடி வெளுத்த HM” சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த பகீர் புகார்…. திருநெல்வேலியில் வெடித்த மாபெரும் சர்ச்சை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் கடுமையான ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read more