இயக்குனர் வம்சி பைடிபள்ளி 2007 ஆம் வருடம் பிரபாஸ் நடிப்பில் வெளியான முன்னா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின் பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். தற்போது தமிழில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்கி உள்ளார். இது இவரின் இரண்டாவது தமிழ் திரைப்படம் ஆகும். மேலும் ஜனவரி-14 தேதி தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்ட வாரிசு திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் தெலுங்கில் சுமார் 20 கோடியை வசூல் செய்திருக்கின்றதாம். இதில் பங்கு தொகையாக மட்டும் சுமார் 11 கோடி கிடைத்து இருப்பதாக கூறுகின்றனர். இத்திரைப்படத்தின் தெலுங்கு உரிமை 14 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதால் படம் லாபத்தை பெற இன்னும் மூன்று கோடி வசூலித்தாக வேண்டும். மேலும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இந்த படம் லாபத்தை தொடங்கி விட்டதாக கூறுகின்றனர். சென்ற ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தமாக வாரிசு திரைப்படம் 210 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.