விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் அமைதியாக கொண்டாடவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்கவும், சாராயம், குட்கா  குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பழைய ரவுடிகள் சரித்திர குற்றவாளிகள் உள்ளிட்டோரை கைது நடவடிக்கை ஈடுபடவும் உத்தரவிடப்பட்டது.

இதனால் சென்ற 11-ம் தேதி முதல் சரித்திர குற்றவாளிகள் 16 பேரும் குட்கா சாராய வழக்குகளில் 74 பேரும் பிற வழக்குகளில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதை தவிர்த்து பழைய குற்றவாளிகள் 101 பேருக்கு நன்னடத்தைச் சான்று பெறப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் புகார் கொடுக்க 94981 00485, 04146-222172 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.