அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோபைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான ஆவணங்களாகும்.

இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசின் அதி முக்கிய ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ராபர்ட் ஹூ தலைமையில் தலைமை குழு அமைத்து அமெரிக்கா அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லேண்ட் உத்தரவிட்டுள்ளார்.