லண்டனில் உள்ள Berkshire உள்ள ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இளம் பெண் ஒருவரை நாய் கடித்தது. இந்நிலையில் அடுத்த சில மாதங்கள் கழித்து அக்டோபர் 27-ஆம் தேதி ரயில்வே ஊழியரை நோக்கி வந்த அதே நாய் அவரின் கையில் கடித்துள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரிட்டிஷ் போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அந்த நாய் கட்டுப்பாடு இல்லாத ஆபத்தான நாய் என தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளை நிற நாயை கையில் வைத்திருக்கும் நபரின் புகைப்படத்தையும் போலீசார்  வெளியிட்டுள்ளனர். அந்த நாய் தொடர்பான தகவல்கள் அந்த நபரிடம் இருக்கும் என போலீசார் கருதுகின்றனர். அதனால் அவரை அடையாளம் கண்டாலோ அல்லது அவர் குறித்த தகவல் தெரிந்தாலோ உடனடியாக எங்களிடம் தெரிவிக்கலாம்” என போலீசார் கூறியுள்ளனர்.