அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக பெங்களூரு, மைசூர் நாள்தோறும் செய்கின்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் தூத்துக்குடியில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்ற போது நடு வழியில் நின்றது. திடீரென அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு டிரைவர்கள், அதிகாரிகள் மற்றும் ரயிலில் பாதுகாப்புக்கு வந்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்பெட்டியில் இருந்த மர்ம ஆசாமி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்துள்ளார். ஆனால் அவர் யார் என்று தெரியவில்லை. இதனால் 20 நிமிடம் தாமதமாக மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்றது. ரயில்வே கேட்டை மறைத்து எக்ஸ்பிரஸ் ரயில் நின்றதால் ரயில்வே கேட் திறக்க முடியாமல் 20 நிமிடத்திற்கு மேலாக பூட்டப்பட்டிருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சேரமத்திற்கு உள்ளானார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.