தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை தேர்வு துறையின் இணையதளம் மூலமாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணைய வழி விண்ணப்ப கட்டண தொகை 50 ரூபாய் உடன் சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் டிசம்பர் 19ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.