தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம்.

வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர உதவிக்கு 1913-க்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஏற்கனவே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.