தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருவதால் பேருந்து சேவை தடைப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், சென்னை மற்றும் செங்கல்பட்டில் ஒருசில இடங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்களும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.