ஆந்திராவை சேர்ந்த எர்ரமட்டி மங்கம்மா என்பவர்தான் உலகின் மிக வயதான தாய் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் குண்டூரில் தனது 74வது வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஐவிஎஃப் நுட்பத்தின் மூலம் செயற்கை கருத்தரித்தல் முறையில் அவர் இந்த குழந்தையைப் பெற்றெடுத்தார்.

50 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு பிரசவம் மிகவும் கடினமாகிவிடும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. 2019 இல், எர்ரமட்டி ஐவிஎஃப் மூலம் கர்ப்பமானார். இப்போது அவர் சிறு குழந்தைகளை வளர்த்து வருகிறார்.